×

தி.நகர், கொத்தவால்சாவடி, திருமழிசை மார்க்கெட்டில் கொரோனா பரிசோதனை நாளை தொடக்கம்: விக்கிரமராஜா தகவல்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை:
மாநிலம் முழுவதும் மூடி வைக்கப்பட்டுள்ள காய்கறி, பூ, பழம் வணிக வளாகம், சென்னை கோயம்பேடு காய்கறி, பூ, பழம் வணிக வளாகம், மற்றும் உணவு தானிய வணிக வளாகத்தையும் விரைந்து திறந்திட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொது போக்குவரத்து முடக்கப்பட்டு, தனியார் பேருந்துகள் இயக்கப்படால் இருக்கின்றன. வணிக செயல்பாடுகளுக்கு பெரும் இடையூறாய் இருப்பதை கவனத்தில் கொண்டு உடனடியாக இ-பாஸ் முறையை ரத்துசெய்யவேண்டும்.  
மேலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொற்றுநோயை கட்டுப்படுத்து மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள சென்னை தி.நகர், கொத்தவால்சாவடி, திருமழிசை காய்கறி மார்க்கெட் போன்ற பகுதிகளில் தொற்றுநோய் எதிர்ப்புத்திறன் பரிசோதனைகளை ஆங்காங்கு உள்ள வணிகர்கள் மற்றும் அரசு அங்கீகரித்துள்ள பரிசோதனை மையத்தோடு இணைந்து, பரிசோதனை முகாம்களை 13ம் தேதி(நாளை) முதல் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,Kothavalsavadi ,T.Nagar ,testing ,Thiruvananthapuram ,Wickramarajah , T.Nagar, Kothavalsavadi, Thirumalisai Market, Corona Test, Starting Tomorrow, Wickramarajah
× RELATED உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள...